என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வீட்டிற்கு தீ வைத்த கூலிதொழிலாளி
நீங்கள் தேடியது "வீட்டிற்கு தீ வைத்த கூலிதொழிலாளி"
சேலம் அருகே சந்துகடைகளில் மது கிடைக்காத ஆத்திரத்தில் தொழிலாளி வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் ஜாகீர் அம்மா பாளையம் காளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 37). கூலி தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை இவர் திடீர் என தனது வீட்டிற்கு தீ வைத்தார். தீ எரிவதை பார்த்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டுவெளியே ஓடி வந்து சத்தம் போட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் வந்து தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென பரவியதால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெங்கடாஜலம் சந்துகடைகளில் மது வாங்கி குடித்து வந்தார் என்பதும் தற்போது சந்துகடைகள் மூடப்பட்டதால் மது கிடைக்காத ஆத்திரத்தில் அவர் வீட்டிற்கு தீ வைத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஜாகீர் அம்மா பாளையம் காளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 37). கூலி தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை இவர் திடீர் என தனது வீட்டிற்கு தீ வைத்தார். தீ எரிவதை பார்த்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டுவெளியே ஓடி வந்து சத்தம் போட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் வந்து தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென பரவியதால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெங்கடாஜலம் சந்துகடைகளில் மது வாங்கி குடித்து வந்தார் என்பதும் தற்போது சந்துகடைகள் மூடப்பட்டதால் மது கிடைக்காத ஆத்திரத்தில் அவர் வீட்டிற்கு தீ வைத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X